states

img

ஜெகன் மோகன் மீது மதரீதியாக விமர்சனம் ஆந்திராவில் மதமோதலை தூண்டும் முதல்வர் சந்திரபாபு

அமராவதி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு  தேசம் - பாஜக - ஜன சேனா ஆகிய கட்சிகள்  அடங்கிய கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல்வராக தெலுங்குதேசம் தலைவர் சந்திர பாபு உள்ள நிலையில், கடந்த ஜெகன் மோகன் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்) ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான லட்டு பிர சாதத்தில் (நெய் மூலமாக) மாடு, பன்றிகளின் கொழுப்பு மற்றும் மீன்  எண்ணெய் கலப்படம் செய்யப் பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்று ஆந்திர  முதல்வர் சந்திரபாபு சமீபத்தில் தெரிவித்தார். இந்த லட்டு பிரச்ச னையை வைத்து ஆந்திராவை குஜ ராத்தைப் போன்று மத அரசியல் கள மாக மாற்றும் முயற்சியில் தெலுங்குதேசம் - பாஜக கூட்டணி தீவிரமாக இறங்கியுள்ளது.

சாமியார் வேடத்தில்  பவன் கல்யாண்

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்  யாண் லட்டு பிரச்சனை மூலம்  மதவாத அரசியலை தீவிரப்படுத்தி யுள்ளார். மாட்டுக் கொழுப்பு கலப்  பட லட்டால் திருப்பதி ஏழுமலை யான் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி 11 நாள் விரதத்து டன், “காவி” உடை அணிந்து ஆந்தி ராவில் வலம் வந்து கொண்டிருக்கி றார். அதாவது பிரதமர் மோடி (குஜ ராத் முதல்வராக இருந்த பொழுது),  உத்தரப்பிரதேச முதலவர் ஆதித்ய நாத் வரிசையில் பவன் கல்யாண்  “காவி முதல்வராக” மாறியுள்ளார்.

பைபிள் படிக்கும் ஜெகன்...

பவன் கல்யாணை போலவே லட்டு பிரச்சனையை முன்வைத்து முதல்வர் சந்திரபாபுவும் மத ரீதி யிலான அரசியலில் குதித்துள்ள நிலையில், “லட்டு விவகாரத்தில் சந்திரபாபு அரசியல் செய்கிறார்.  இதனால் திருமலைக்கு சனியன்று காலை கால்நடையாக சென்று ஏழு மலையானை தரிசிக்க உள்ளதாக வெள்ளியன்று அறிவித்து இருந் தார்” முன்னாள் ஜெகன் மோகன். ஆனால்,”திருமலைக்கு வேற்று மதத்தவர் வந்தால், தேவஸ்தான நிபந்தனையின்படி, தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்  னரே அவர் ஏழுமலையானை தரி சிக்க வேண்டும். இல்லையேல் திரு மலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்” என திருப்பதி தேவஸ்  தான அதிகாரிகள் மூலம் சந்திர பாபு அரசு உத்தரவிட்டது. இதைத்  தொடர்ந்து திருப்பதி பயணத்தை  ஜெகன் மோகன் ரத்து செய்வதாக  அறிவித்தார். உடனே சந்திரபாபு`, “ஜெகனை யாரும் திருமலைக்கு வர வேண்டாம் என கூறவில்லை. தேவஸ்தானத்தில் உள்ள நிபந்த னைகளை பின்பற்றுமாறு அறி வுறுத்தப்பட்டது. ஆனால் கோவி லுக்கு வரவில்லை என அறிவித்த தன் மூலம் 4 சுவற்றுக்குள் பைபிள் படிக்கிறேன் என்பதை ஜெகன் மோகனே ஒப்புக்கொண்டுள்ளார். திருமலைக்கு வந்தால் தேவஸ் தான பதிவேட்டில் கையெழுத்திட நேரிடும் என்பதால் அவர் திரு மலைக்கு வரவில்லை” என சர்ச்  சைக்குரிய வகையில் கருத்து தெரி வித்துள்ளார். “பைபிள் படிப்ப தால் திருப்பதி கோவிலுக்கு வர வில்லை” என ரெட்டி சமூக கிறிஸ்த வரான ஜெகன் மோகனை மதத்தை  முன்வைத்து சந்திரபாபு விமர் சித்து இருப்பது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நிலவும் மதம் சார்ந்த பதற்ற நிகழ்வுகளை ஆந்திர மாநிலத்திலும் அரங்கேற்ற  தெலுங்குதேசம் - பாஜக - ஜன சேனா கூட்டணிக் கட்சிகள் இறங்கி யுள்ளன என எதிர்க்கட்சித் தலை வர்கள், அரசியல் விமர்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நான் மதச்சார்பற்றவன்
சந்திரபாபுவுக்கு ஜெகன் மோகன் பதிலடி

“4 சுவற்றுக்குள் பைபிள் படிப்பதால் திருப்பதி கோவிலுக்கு வர
வில்லை” என்ற சந்திரபாபுவின் விமர்சனத்திற்கு ஜெகன் மோகன் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,”ஒட்டுமொத்த நாடும், 
மாநிலமும் எனது  மதத்தை அறிந்திருக்கிறது. நான் பைபிளைப் 
படித்தேன், இல்லையென்று சொல்லவில்லை. அதே போல இந்து 
மதம், மரபுகள் மற்றும் சடங்குகளை மதிக்கிறேன். இஸ்லாம் மற்றும் 
சீக்கிய மதத்தையும் நான் மதிக்கிறேன். எனது மதம் என்பது மனித
நேயம் மட்டுமே. நான் மதச்சார்பின்மையில் தான் நம்பிக்கை கொண்டவன்” என சந்திரபாபுவுக்கு ஜெகன் மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.